TOP 10 PREDICTIONS OF NOSTRADAMUS
நம் வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பது கூட நம்மால் கணிக்க முடியாத நிலையில், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் அடுத்த 2000 ஆண்டுகளுக்கு நடக்கவிருந்த நிகழ்வுகளை கணித்துக் கூறியுள்ளார் என்பதை நம்ப முடிகிறதா??? நாஸ்டர்டாமஸ் ( 1503-1556) கிபி 1503 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த நாஸ்டர்டாமஸ் தான் அவர். மருத்துவம், ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய இவர், தனது " PROPHECIES " என்ற புத்தகத்தில் எதிர்காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை கணித்துக் கூறியுள்ளார். "Fire gazing' என்ற முறையில் இவர் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கணித்தார் என கூறப்படுகிறது. இந்திரா காந்தி படுகொலை இந்திரா காந்தியின் படுகொலை தொடர்பாக இவர் எழுதிய பாடலின் தமிழாக்கம் பின்வருமாறு: " பெருமகள் அவர்க்கு ராஜ்ஜியம் திரும்பும்; எதிரிகள் சதியாளராய் மாறுவர்; எழுபதுக்கு மூன்றில் துர்மரணம் உறுதியாகும் " இப்பாடலில் 1.முதல் வரி: தகுதி நீக்...