இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விருந்து

 மாநகரின் பிரதான சாலை. மேம்பாலங்கள் அமைந்திருப்பினும் நெரிசல்களுக்குக் குறைவேதுமில்லை.  பலரைப் போலவும் தனது கடந்தகால அடையாளங்களை மறந்து தனக்கென புதியதோர் அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்ற கனவுடன் மாநகரில் குடியேறியவர்களில் அவனும் ஒருவன்.  அவனது அறையிலிருந்து சாலைக்கு செல்லும் வழியில் உள்ள குறுகலான நடைபாதையில் அமைந்துள்ளது அய்யனார் ஓட்டல். பட்ஜெட்டுக்குள் சாப்பிடவிரும்பும் அசைவப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். அக்கடையின் மசாலா வாசனை தெருவெங்கும் மணந்துகொண்டிருந்தது. "நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" என்று பாரதி விளித்தவையாவும் இலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. கொத்துப்பரோட்டா போடும் மாஸ்டரின் வடிவில் சிவமணியைப் பார்த்தவாறே அம்மெட்டுக்குத் தலையசைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனுக்கான இரவு உணவு தயாராகிவிட்டது. "தம்பி ஸ்ட்ராங்கா ஒரு டீ எடுத்துக்க" என்றார் கடைக்கார அண்ணன். 'வேற எதாவது வேணுமா?" என்றவரிடம் எதுவும்‌ வேண்டாமென்று விட்டான். விரைவில் ஒருநாள் அங்கு சென்று சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஓட்டலுக்கு எதிரிலுள்ள டீக்கடையில் நின்று தேநீர் அருந்தினான். கையில் ...

உமிழ்வினை

பணிக்குச் செல்லும் உழைக்கும் வர்க்கம் கூடடையும் நேரம். இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடைப்பட்ட மங்கலான மாலைப்பொழுது. சாலையோரக் கடைகளும் மின்விளக்குக் கம்பங்களும் ஒளியை உமிழத்தொடங்கியிருந்தன. வழக்கம்போல எதிர்காலம் பற்றிய சிந்தனைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் அவன். அலுவலகத்தில் தனது உயரதிகாரிகளிடம் வாங்கிய திட்டுகளுக்கு பதில் கூறும் தருணம்‌ இதுவே.  என்றைக்கும் இல்லாத அளவு போக்குவரத்து நெரிசல் அன்று அதிகமாக காணப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சிக்கொடிகளும் வரவேற்புப் பலகைகளும் நிறைந்திருந்தன. சேலம் வைத்தியரைப்போன்று தங்களது கட்சித்தலைவரின் அடுத்தடுத்த தலைமுறைகளின் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் அலங்கரித்த பேனர்களைத் தொண்டர்கள் நெடுவெங்கிலும் வைத்திருந்தனர். கட்சியின் முக்கியப் பிரமுகரான சாராய ஆலை அதிபர் வருகைக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான் அவை.    இரண்டு மைல் தொலைவிற்கு வாகனங்கள் அனைத்தும் நத்தையாய் ஊர்ந்து கொண்டிருந்தன. எந்தப் பலனும் இல்லையென்று தெரிந்தாலுமே வாகன ஓட்டிகள் ஒலிப்பானைத் தொடர்ந்து ஒலிக்கவிட்டுக்கொண்டே இருந்தனர்.  சுற்றுவட்டார...