இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்

படம்
         இந்தியாவின் முக்கியமான சிறப்பம்சம் அதன் பன்முகத்தன்மை தான். சாதி, மதம், இனம், மொழி என்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக பிரிவினைவாதம் தூண்டப்படுகிறது. சில அமைப்புகள் இத்தகைய வெறுப்புணர்வை மக்களிடையே திணித்து வருகின்றன. அரசியல் உள்நோக்குடன் இந்தியன் யார்? தமிழன் யார்? போன்ற மரபணு சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.  இந்த மண்ணின் மைந்தர்கள் யார்?         ஆரியர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை பலரை ஈர்க்கும் வகையில் இந்தியா செல்வ செழிப்புடன் இருந்தது. அவர்கள் மூலம் இங்குள்ள மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்து, இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் இவ்வாறு பரவின. சாதி கட்டமைப்புகளும் வலுப்பெற்றன. இந்நிலையில் இந்தியா யாருக்கு சொந்தம்? ஆதித்தமிழர் யார்? போன்ற வினாக்கள் எழுகின்றன. மதவாதப் பிரிவினை           மதரீதியாக நாட்டைப் பிரிக்க நினைக்கும் சிலர் இஸ்லாமியர்களை இந்தியர் அல்ல என வாதிடுகின்றனர். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட பிரிவினையில், இஸ்...

கஜா - கற்றுத்தந்தது என்ன????

படம்
                  கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் டெல்டா மாவட்ட மக்கள், மற்றவர்கள் தரும் உணவுப் பொட்டலங்களுக்காகக் கையேந்திக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.      இங்கு ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் கால்நடைகளை இழந்துள்ளனர். குறிப்பாக இங்குள்ள மக்களின் முக்கிய சொத்தாக இருந்த தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நிவாரணப் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அரசும் தன்னால் முடிந்தவரை பணிகளை முடுக்கி விடுகிறது.          பல மாவட்டங்களில் இருந்தும் அரசு ஊழியர்கள் குறிப்பாக மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராது உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முழுமையாக மின்னிணைப்பு வழங்கிட பல நாட்களாகின. நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க துப்புரவுப் பணியாளர்கள...

வீழ்வே னென்று நினைத்தாயோ????

படம்
         தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள இக்காலத்தில் உலக நடப்புகளையும் பொது அறிவுகளையும் விரல்களுக்கு இடையில் தெரிந்துகொள்ளும் பேறு பெற்றுள்ள நாம், தமிழன் என்ற பெருமையோடு படிக்க வேண்டிய நம் முன்னோர்கள் பலர் உள்ளனர்.       தன் வாழ்நாள் முழுவதும் "அச்சம் தவிர்த்து, ஆண்மைத் தவறாமல், ஏறு போல் நடந்து, கேட்டிலும் துணிந்து நின்று, சிதையாத நெஞ்சம் கொண்டு, சுமைகளுக்கு இளைத்திடாமல், செய்வது துணிந்து செய்து, சொல்வது தெளிந்து சொல்லி, தாழ்ந்து நடவாமல், தோல்வியில் கலங்காமல், நீதி நூல் பயின்று, நேர்படப் பேசி, பாட்டினில் அன்பு செய்து, பணத்தினைப் பெருக்காமல், வருவதை மகிழ்ந்துண்டு, வேதம் புதுமை செய்து, வையத் தலைமை கொள்ள" விரும்பினாரே ஒருவர், அவரைப் பற்றி படிக்க வேண்டியது தமிழனாக நம் அனைவரின் கடமை.                  முறுக்கு மீசையும் நெற்றித் திலகமும் தலைப் பாகையும் கூரிய விழிகளும் கொண்ட இவரது முகத்தைப் பார்க்கும் போது, நம்மை அறியாமலே ஓர் ஈர்ப்பு இவர் மீது வரும். அவர் யார்? தான் யார் என்பதை தனது குறுகிய...