இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாகப்பட்டினம் - சீற்றங்களும் சிறப்புகளும்

படம்
     கஜா புயலின் கோர தாண்டவத்தால் பெரும் அழிவிற்கு உண்டான தமிழக டெல்டா மாவட்டங்களில் முக்கியமான ஒன்று நாகப்பட்டினம் மாவட்டம். இயற்கை சீற்றங்களின் பிடியில் சிக்குவது நாகை மாவட்டத்திற்கு இது புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் அழிவை எதிர்பார்த்து காத்திருப்பது இம்மாவட்ட மக்களின் விதி. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்குப் பிறகு, கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.            உண்மையில் இயற்கை சீற்றங்களுக்கும், அழிவுகளுக்கும் மட்டுமே உரித்தான மாவட்டமா நாகப்பட்டினம்? நாகப்பட்டினம் - பண்டைை வரலாறு       நாகை மாவட்டம் நீண்ட நெடிய வரலாற்று சிறப்பு உடையது. பண்டைய தமிழ் மன்னர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேய ஆட்சியிலும் முக்கிய பங்கு வகித்தது. சங்க காலம் தொட்டே, அயல்நாட்டு தொடர்பு கொண்ட நகரம் நாகப்பட்டினம்.           இலங்கையில் இருந்து வந்து குடிபுகுந்த ''நாகர்" இன மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பிட்ட பெயரே 'நாகப்பட்டினம்'.  (பட்டினம்- கடற்கரை நகரம்)  நாகலிங்க மலர்கள் அதிகம் மலர்ந்ததா...

சர்காரின் இலவச அரசியல்

படம்
       கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பலராலும், குறிப்பாக இளைஞர்களால் பேசப்படும் செய்தி 'சர்கார்'. மாநில அரசின் திட்டங்கள் பற்றிய விமர்சனங்களைக் காட்சிப் படுத்தியதைக் கண்டித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் திரையரங்குகளில் உள்ள பேனர்களைக் கிழித்தெறிந்தும், படம் திரையிடப்படுவதை நிறுத்தியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் படத்தின் மீதான கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் அப்படமானது மறுதணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.          ரசிகர்கள் பலர் அரசிற்கு எதிராக கடுமையான எதிர்வினைகளை வெளிக்காட்டி வருகின்றனர். தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை சட்டம் நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. நாம் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தவறல்ல. திரைப்படங்கள் போன்ற மிகப்பெரிய ஊடகங்கள் மூலமாக இவற்றை வெளிப்படுத்தும் போது அக்கருத்துக்கள் பலரை சென்றடையும்.        பொது வாழ்க்கையில் விமர்சனங்கள் சகஜம்தான். நம் மீது வீசப்படும் வ...

தமிழக அரசியலில் இளைஞர்கள்

படம்
      தமிழக இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஈடுபாடு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு முந்தைய தலைமுறையினர்களிடம் காணாத ஒரு எழுச்சியை இப்போதைய தமிழக இளைஞர்களிடம் காணமுடிகிறது. இதற்கு முக்கிய சான்றாக அமைந்தது ஜல்லிக்கட்டு போராட்டம். பறிக்கப்பட்ட நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்க தன்னெழுச்சியாக களத்தில் இறங்கியதன் மூலம், தேசிய ஊடகங்களே திரும்பிப் பார்க்காது என்ற நிலையை மாற்றி, உலகையே உற்று நோக்க வைத்தனர்.        கடந்த காலங்களைப் போலன்றி, இப்போது இளைஞர்கள் அரசியல் பற்றி பேசுவதிலும் பகிர்வதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது சமூக ஊடகங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் நம்மிடம் உள்ள குறைகளையும் நாம் ஆராய்ந்து பார்த்து அவற்றை சரிசெய்து கொள்வது காலத்தின் அவசியமாகும். மாய உலகின் கட்டுப்பாட்டில் இளைஞர்கள்                       உலகமே  உள்ளங்கையில் வந்த பிறகு, சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. ...